search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜனதா தலைவர்"

    காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசினார். #AmitShah #IllegalImmigrant #Kashmir
    ஜம்மு:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் அமித்ஷா, காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரமான ஜம்முவில் நேற்று பிரசாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலையில், பயங்கரவாதத்தை எதிர்த்து பா.ஜனதா கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விவரித்தார்.

    அவர், முந்தைய அரசுகள் லடாக், ஜம்மு பிரிவுகளிடத்தில் பாகுபாடு காட்டியதாக குற்றம் சாட்டினார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இந்த பகுதிகளுக்கான நிதி, வளர்ச்சித்திட்டங்களுக்காக பயன்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் முந்தைய குடும்ப அரசுகள், தங்களது சுய முன்னேற்றம் குறித்துத்தான் கவலைப்பட்டனர். ஆனால் பாரதீய ஜனதா கட்சி அரசு பதவி ஏற்றது முதல் ஒவ்வொரு பைசாவும் சாமானிய மக்களுக்கு போய்ச்சேருவதை உறுதி செய்தோம்.

    பாரதீய ஜனசங்கத்தின் தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி தனது உயிரை தியாகம் செய்த இடம், நமக்கே உரியது. புலவாமாவில் 40 வீரர்களின் உயிர்த்தியாகம், வீணாகப்போய்விடாது.

    பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிற சதிகாரர்களை தண்டிக்கும் வகையில், தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படைகளுக்கு பிரதமர் மோடி அதிகாரம் அளித்துள்ளார்.

    காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே அமித்ஷா, டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “பிரதமர் மோடி 28-ந் தேதி நாடு முழுவதும் 15 ஆயிரம் இடங்களில் உள்ள 1 கோடி பேருக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள், தன்னார்வலர்கள், நலம் விரும்பிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாட இருக்கிறார். இது உலகின் மிகப்பெரிய காணொலி காட்சியாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.
    உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். #Uttarakhand #ITRaid #BJP #AnilGoyal
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ‘குவாலிட்டி ஹார்டுவேர்’, ‘உமாங் சேரீஸ்’, அலெக்சியா பேனல்ஸ், குவான்டம் பல்கலைக்கழகம், ‘பஞ்சாப் பிளைவுட் இன்டஸ்ட்ரீஸ்’ உள்ளிட்ட இந்த 13 நிறுவனங்களில் விற்பனையை மறைத்தல், கணக்கில் வராத ரசீதுகள் மற்றும் முதலீடுகள் என ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.

    கோயல் 2016-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். கட்சியின் மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் இவர் சமீபத்தில் டேராடூன் மேயர் பதவிக்கு டிக்கெட் கேட்டு வந்தார்.
    டெல்லியில் ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்த ஒரு வீட்டின் பூட்டை மாநில பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி நேற்று உடைத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #BJP #ManojTiwari #BreakingLock
    புதுடெல்லி:

    டெல்லியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருக்கும் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களை மாநகராட்சி நிர்வாகம் ‘சீல்’ வைத்து வருகிறது. இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்த ஒரு வீட்டின் பூட்டை மாநில பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி நேற்று உடைத்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. இது குறித்து மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.க்கு பிறகு, தற்போது ‘சீல்’ வைக்கப்பட்டவற்றையும் பா.ஜனதா அழித்து வருகிறது என்று தெரிவித்தார்.

    பா.ஜனதா ஆளும் மாநகராட்சிகள் சார்பில் காலையில் கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படுவதும், மாலையில் அந்த கட்சியினரே அதை உடைப்பதும் நடந்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், மாநில மக்களை முட்டாள்கள் என பா.ஜனதாவினர் நினைக்கிறார்களா? என கேள்வியும் எழுப்பினார். இத்தகைய ‘சீல்’ வைக்கும் நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாக்க தவறிய மனோஜ் திவாரி உள்ளிட்ட பா.ஜனதா எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.  #BJP #ManojTiwari #BreakingLock
    வங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதற்கு முன் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #VijayMallya #RahulGandhi #BJPLeader
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்தில் தலைமறைவாக வசித்து வருகிறார். அவர் மீது, ‘தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

    ஆனால் லண்டன் கோர்ட்டில் நடைபெறும் நாடு கடத்தக்கோரும் வழக்கின் விசாரணையில் அவர் பங்கேற்பதால், மும்பை கோர்ட்டில் நேரில் ஆஜராகமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக சட்ட பிரதிநிதி ஒருவர் ஆஜராவார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்த நிலையில் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு முன் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்தினருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இது தொடர்பாக கூறியதாவது:-

    இந்திய வங்கிகளை மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கும் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் மோடி அரசு கருணையுடன் நடந்துகொள்கிறது. இந்திய சிறைகள் சரியில்லை என மல்லையா கூறியதால், அவருக்காக சிறப்பு ஜெயில் ஏற்படுத்தப்படுகிறது. இதை ஏற்க முடியாது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும்.

    விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேறும் முன் பா.ஜனதா மூத்த தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்களின் பெயரை வெளியிடமாட்டேன்.

    மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் குறித்த அழகான சுவரொட்டிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த ரெயில் டிக்கெட் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகம். நாளொன்றுக்கு 5 ஆயிரம் மக்களுக்காக ரூ.1½ லட்சம் கோடி என்பது தேவையற்ற முதலீடு.

    இந்த திட்டத்தை பற்றி பேசுவதில் மோடி அரசு காட்டும் ஆர்வத்தை, அதை செய்து முடிப்பதில் காட்டவில்லை. வேகமெடுக்காத இந்த திட்டம் வெறும் எண்ணம் மட்டும்தான். அதில் உண்மை இல்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    பின்னர் மேற்கு லண்டனில் இந்திய சர்வதேச காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை என கூறிவரும் பிரதமர் மோடி, இதன் மூலம் காங்கிரசை அல்ல, நாட்டு மக்களையே அவமதித்து வருகிறார். ஏனெனில் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை இந்தியா காட்டியிருக்கிறது. இந்திய மக்கள் இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சி உதவியிருக்கிறது.

    அதேநேரம் தற்போது தலித்துகள், விவசாயிகள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் மற்றும் இந்திய ஏழைகள், தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கிறார்கள். இதைக் கேட்டால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தலித் வன்கொடுமை சட்டம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    நாட்டில் யாரும் எதையும் பெறவில்லை. ஆனால் அம்பானி மட்டுமே அனைத்தும் பெற்று வருகிறார். இந்த மனிதர் ரூ.45 ஆயிரம் கோடி கடன் பெற்று இருக்கிறார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை, ஒரு தொழில் அதிபரின் வளர்ச்சிக்காக பா.ஜனதா அரசு கூடுதல் தொகைக்கு அதிகரித்து இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் கமிஷன், ரிசர்வ் வங்கி போன்ற நாட்டின் தூண்கள் அனைத்தும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. சீனா நாளொன்றுக்கு 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியா வெறும் 450 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரும் பிரச்சினை ஆகும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    முன்னதாக இந்த கூட்ட அரங்கிற்கு ராகுல் காந்தி வருவதற்கு முன் அங்கு வந்த ‘காலிஸ்தான்’ அமைப்பு ஆதரவாளர்கள் சிலர் ‘காலிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கூட்டத்தினர் சிலரும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  #VijayMallya #RahulGandhi #BJPLeader
    ×